Thursday, February 21, 2013

கோலாலம்பூரில் "தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்" உலகப் பரந்துரை மாநாடு-3


எதிர்வரும் 24-2-2013இல் தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம் எனும் உலகப் பரந்துரை மாநாடு மலேசியத் தலைநரான கோலாலும்பூர், தான்சிறீ சோமா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெறவுள்ளது.

இம்மாநாட்டின் ஏற்பாடுளை மலேசியாவின் மூன்று தேசிய அமைப்புகளான மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம், மலேசியத் தமிழ் நற்பணிக்கழகம், மலேசியத் திராவிடர்க் கழகம் ஆகியன செய்து வருகின்றன். மேலும் மலேசிய நாட்டில் இயங்கிவரும் 15க்கும் மேற்பட்ட தமிழுணர்வுக் கொண்ட அமைப்புகள் இம்மாநாடு சிறக்கத் துணைபுரிந்து வருகின்றன. 

மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம் “தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம்” எனும் தமிழ் மக்களின் நீண்டகாலப் போராட்டம் வெற்றி பெறும் வகையில் கருத்துப் பரப்புரைகளைச் செய்து துணை நிற்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழக அரசு, புதுவை அரசு, மலேசிய அரசு இன்னும் பிறநாடுகளிலிருந்து அவ்வந்த நாடுகளின் சார்பாகத் தமிழ் அறிஞர்கள் தமிழ் ஆய்வாளர்கள் இந்த உலகப் பரந்துரை மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.   


இம்மாநாட்டில் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கலை ஒட்டிய சிறப்புத் தீர்மானங்களும், தமிழக மற்றும் உலக அரசுகளின் செயற்பாட்டுக்கான பொதுத் தீர்மானங்களும், ஈழத் தமிழர் நலன் குறித்து உலக அரசுகளுக்கான வேண்டுரைகளும் நிறைவேற்றப்படவுள்ளன.

இம்மாநாடு காலை 8.00 மணிக்குத் தொடங்கி பகல் 2.00 மணிக்கு முடிவுறும். இம்மாநாட்டில் தமிழ்மறை ஓதப்பட்டு நிகழ்ச்சிகள் முறையாகத் தொடங்கும்
  
இம்மாநாட்டின் கருப்பொருளை ஒட்டி தமிழறிஞர்கள் தத்தம் கருத்துரைகளைச் சான்றுகளுடன் நிறுவர். பல அரிய கருத்துகளைத் தாங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டு மலர் வெளியீடு செய்யப்பெறும்.

இம்மாநாட்டைக்குறித்து உலக முழுவதும் உள்ள தமிழ்ச்செய்தி ஊடகங்கள் அனைத்தும் தமிழர்களின் எழுச்சிக் குறித்து கருத்துப் பரப்புரைகளைச் செய்வதற்கும் தாளிகைகள், மாதிகைகள், ஏடுகள் ஆனைத்தும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கள் மலரை வெளிக்கொணர்வதற்கும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.   

1921 ஆம் ஆண்டு தமிழகத்தில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்புலவர்கள் ஒன்றுக்கூடி திருவள்ளூவராண்டினை முடிவு செய்து தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம் என அறிவிப்புச் செய்தனர்; இதனை உலகத் தமிழர்கள் ஏற்றுப் பின்பற்றவே வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாடு நடைபெறுகின்றது.


இம்மாநாட்டில் தமிழர்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

மிராக எழுதற்கும் து னி அடையாளம் பேணுதற்கும் 
"தை முதல்நாளே மிழாண்டுத் தொடக்கம்" என்தை உத்தின் செவிளில் அறைதற்கும் மிழர்கள் அனைரும் லையெதிளுவோம்.. வாரீர்..! வாரீர்..!!
 

No comments:

Blog Widget by LinkWithin