Sunday, June 07, 2009

வீழ்ந்த வீரர்களும்.. வென்ற கோழைகளும்..


முள்ளிவாய்க்கால்....
தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து....
மலைகள் பல சாய்ந்து.....

இரத்தத்தில்
நிலமெல்லாம் குளமாகி......
தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி.....

இறுதிவரை
வீரம் சொல்லிய மண்.....
வேங்கைகை பல சாய்ந்த மண்....

வல்லரசின்
வீரர்களைச் சேர்த்து....

வாங்கி வந்த
குண்டுகளைப் போட்டு....

பறந்து வந்து
எரிமலையை போட்டு....

பாய்ந்து வரும்
பீரங்கியால் தாக்கி...

எத்தனை படுகொலையை
இலகுவாய் செய்துவிட்டு......
வெற்றியாம் வெற்றி....!
அவர்கள் வீரராம் வீரர்....!

கோழையின் வெற்றி
உன் கொல்லைப்புறம் மட்டும் தான்....
வந்தவர்கள் போய்விட்டால்
உன் வாழ்க்கை மட்டம் தான்....

நம் வீரர் பலர் வீழ்ந்தாலும்
விடாத பயம் உனக்கேன்....?
நீ நூற்றுவிட்ட விடுதலை தீ
நாட்களானால் பற்றுமென்றா....?

பதறாதே கோழைகளே
பதில் அதற்கு உன்னிடம் தான்....!
என் நாளும் பக்கத்தில் வரமாட்டார்.....
உலக சன சமூகந்தான்....!

ஓர் இனத்தின் விடுதலையை
ஏளனமாய் பார்க்காதே...
வரலாறுகள் படித்துப் பார்
பின்னர் உன்கண்ணும் தூங்காதே....!

நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்
நம் வீரம் விழவில்லை.....!
விடுதலை கிடைக்கும் வரை
நாம் தூங்கப் போவதில்லை....!


ஆக்கம்:-இளங்கவி

No comments:

Blog Widget by LinkWithin