Tuesday, March 10, 2009

பாவலர் அ.பு.திருமாலனார் எனும் மலேசியத் தமிழ் ஞாயிறு


உலகத் தமிழர்கள் கண்டிப்பாக அறியவேண்டிய மலேசியத் தனிப்பெரும் அறிஞர் - மெய்யறிவர் - தமிழ்நெறியர் - தனித்தமிழ்ப் பெரியவர் தமிழ் ஞாயிறு பாவலர் ஐயா அ.பு.திருமாலனார். அன்னாரைப் பற்றிய அரிய தொகுப்பொன்றைத் தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் ஐயா.மு.இளங்கோவனார் தம்முடைய வலைப்பதிவில் எழுதியிருந்தார். மலேசியத் தமிழறிஞர் பாவலர் ஐயா அவர்களைப் பற்றி தமிழக மண்ணிலிருந்து ஒருவர் எழுதியிருப்பது கண்டு பேருவகை கொள்கிறேன். இந்த அரும்பணியை ஆற்றியுள்ள முனைவர் ஐயா.மு.இளங்கோவனாருக்கு மலேசியத் தமிழ்ப் பற்றாளர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி மொழிகின்றேன்.
*******************************
தமிழ்நெறி சார்ந்த வாழ்க்கை வாழ மலேசியத் தமிழர்களை நெறிப்படுத்தியவர் பாவலர் அ.பு.திருமாலனார் என்பது அறிந்து வியந்தேன். அவர் பற்றி அங்குள்ள பலரிடமும் வினவி அவர்தம் தமிழ்ப்பணிகளைத் தமிழகத்தாருக்கு அறிவிக்க நினைத்தேன். அ.பு.திருமாலனார் தனி மாந்தரல்லர். அவர் ஓர் இயக்கம். அவரின் உணர்வு தாங்கியவர்கள் மலேசியா முழுவதும் பரவி வாழ்கின்றனர்.

அவர் ஒரு பாவலர். படைப்பாளி. கட்டுரையாளர். மெய்ப்பொருளியில் சிந்தனையாளர். அனைவரையும் ஒன்றிணைத்துச் செயல்படும் தலைவர். தமிழ் உணர்வாளர்கள் தமிழகத்திலிருந்து சென்றால் அவர்களை உணர்வு வழியாக அழைத்து, விருந்தோம்பி, சொற்பெருக்காற்ற வாய்ப்பமைத்து, வழி அனுப்பும் இயல்பினர். இத்தொடரின் வழிப் பாவலர் திருமாலனார் பணிகளை இங்கு நினைவுகூர்கிறோம். (விரிவாக)

நன்றி: முனைவர் மு.இளங்கோவன்

1 comment:

அருள் கி said...

http://www.petitiononline.com/IMFP1/

இந்த வேட்பை படித்து கையொப்பம் இடுங்கள்

Blog Widget by LinkWithin